போலி நகை அடமானம் வைத்த பெண் கைது

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே போலி நகையை அடகு வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 66; அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே ஊரைச் சேர்ந்த பார்த்திபன் மனைவி ஆஷா, 24; அவ்வப்பொழுது வந்து நகையை அடமானம் வைத்து ரூ. 6.54 லட்சம் பணம் பெற்றுள்ளார். ராஜேந்திரன் சந்தேகத்தின் பெயரில் நகையை பரிசோதித்த போது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என தெரிய வந்தது.

பெயரை மாற்றி அடமானம் வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைகளை அதே ஊரைச் சேர்ந்த வேலு மகன் சின்னராசு, 30; கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஆஷா மற்றும் சின்னராசு மீது அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ஆஷாவை கைது செய்தனர். தலைமறைவான சின்னராசுவை தேடிவருகின்றனர்.

Advertisement