காந்தி ஜெயந்தியில் கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்; மதுக்கடைகள் திறப்போம் என வாக்குறுதி!
பாட்னா: பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், பீஹாரில் புது கட்சி ஒன்றை துவக்கி உள்ளார். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம் எனவும் கூறியுள்ளார்.
பீஹாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட போவதாக நீண்ட நாட்களாக கூறி வந்தார்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தியான இன்று அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். கட்சிக்கு ' ஜன் சுராஜ்' என பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ள இவர், வரும் தேர்தலில் பீஹாரில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும், ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்வேன்; மதுக்கடைகளை திறப்பேன் என உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பீஹார் மக்களுக்கு மாற்று அரசியலை அளிப்போம். கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக மக்கள், ஆர்.ஜே.டி., கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் மாறிமாறி ஓட்டுப் போடுகின்றனர். இது மாற்றப்பட வேண்டும். மாற்று அரசியலை கொண்டு வருபவர்கள் வாரிசு அரசியல்வாதியாக இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (9)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02 அக்,2024 - 19:41 Report Abuse
ஆனால் ஒரு விஷயத்தில் இவரை பாராட்டவேண்டும். திமுக போல பொய் வாக்குறுதி கொடுத்து, அதாவது திமுக தேர்தலுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று பொய் கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்றுவரை மதுவிலக்கு அமுலுக்கு வரவில்லை. மாறாக ஊரெங்கிலும் மதுக்கடைகள். இவர் நேரடியாக மதுக்கடைகள் திறப்போம் என்று வெளிப்படையாக வாக்குறுதி கொடுக்கிறார்.
0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
02 அக்,2024 - 19:14 Report Abuse
தூய்மையான காற்று சுத்தமான நீர் நல்ல இருப்பிடம் நிழல் தரும் மரங்கள் இவற்றிக்கு மேல் உண்மை பேசுதல் இவைகளை இனிமேல் வழங்கிட யார் இருக்கிறார்கள்? இல்லை என்பது நிசர்சமான உண்மை. ஆண்டவன் அவதாரம் செய்தால் கூட அவன் இருப்பிடம் செல்ல யாரிடம் மன்னிப்பு கேட்பான்? மதுவை விட சுகம் தருவது மாது.இதையும் அரசு கொடுத்தால் தேவலை. தி மு க உடன் கூட்டு சேர்ந்தால் உலகம் உருண்டை என்பது நிரூபிக்க தேவை இல்லை.
0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
02 அக்,2024 - 19:07 Report Abuse
காந்தி பெயரில் கூட சாராயம் விற்கலாம்..அவர் ராயல்டி எதுவும் கேட்க போவது இல்லை..
0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
02 அக்,2024 - 18:53 Report Abuse
பிரசாந்த் கிஷோர் முதல்வராக வாழ்த்துக்கள். சாதி அரசியலை ஊக்குவிக்கும் நிதிஷ் முதல்வராக நீடிக்க முடியாது.
0
0
Reply
Nandakumar Naidu. - ,
02 அக்,2024 - 18:37 Report Abuse
மதுக்கடைகளை திறக்க காந்தியிடம் அனுமதி பெற்றாரோ? இந்துவாக இருக்கும் இவரும் கட்சி தொடங்கிய பிறகு இந்து விரோதியாக மாறப் போகிறார். சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக இந்துக்களை புறக்கணிக்க போகிறார் அவ்வளவுதான்.
0
0
Reply
Oru Indiyan - Chennai,இந்தியா
02 அக்,2024 - 18:10 Report Abuse
ஸ்டாலினின் நண்பர் வேறு எப்படி இருப்பார்.
0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
02 அக்,2024 - 17:41 Report Abuse
Political Partys Consultant கட்சி தொடங்கினார். அப்படியென்றால் கட்சிகளிடமிருந்து அந்த அளவுக்கு பணம் சுருட்டி உள்ளார். காந்தி பேரில் நடக்கும் முஸ்லீம் நேரு காங்கிரஸ் அரசியல் வியாதிகள் இன்னுமொன்று ஆரம்பம் என்று அர்த்தம்
0
0
Reply
RAAJ68 - ,
02 அக்,2024 - 17:34 Report Abuse
நன்றாக இருக்கும் மாநிலத்தை நாசம் செய்யும் நோக்கில் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணம். பெண்கள் இவருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.
0
0
Mohammad ali - ,இந்தியா
02 அக்,2024 - 19:23Report Abuse
அவங்க குடிக்கப்போய்தான் சரக்கு ரேட் ஏறிப்போச்சு .
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement