பழநி முருகன் கோயிலில் கட்டணமில்லா சேவைகள் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

பழநி,:பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டணமில்லா சேவைகள் வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழநி முருகன் கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நாள் முழுவதும் அன்னதானம், கைக்குழந்தைகளுக்கு பால், காலணி பாதுகாப்பு மையம், பஞ்சாமிர்த பிரசாதம் 40 கிராம், படிப்பாதையில் நீர்மோர், சுக்கு காபி, வாகனம் நிறுத்தம், முடி காணிக்கை மையம், கழிப்பறை, குளியலறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கிரி வீதியில் பேட்டரி கார் வசதி, மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு விரைவு தரிசனம், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, முதலுதவி மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி, சித்த மருத்துவ வசதி, மனநல காப்பகம், கருணை இல்லம், ஊக்கத் தொகையுடன் கூடிய நாதஸ்வரம், தவில் பயிற்சி பள்ளி, ஊக்க தொகையுடன் கூடிய அர்ச்சகர் பயிற்சி பள்ளி, ஊக்க தொகையுடன் கூடிய வேத பாடசாலை, பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் பெரிய ஹால் வசதி, தைப்பூசம், பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரை பக்தர்களுக்கு ஓராண்டிற்கு 2 லட்சம் உணவு பொட்டலங்கள் என கட்டணம் இல்லாமல் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement