அரசு சார்பில் காந்தி பிறந்த நாள் விழா

புதுச்சேரி : புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.

கடற்கரை சாலையில் நடந்த விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் தேனீ ஜெயகுமார், லட்சுமி நாராயணன், சாய் சரவணன்குமார், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், வெங்கடேசன், அசோக் பாபு,பிரகாஷ்குமார், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி, கலெக்டர் குலோத்துங்கன் உள்ளிட்டஅதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

காங்.,



புதுச்சேரி மாநில காங்., கமிட்டி சார்பில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, கடற்கரை சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்அனந்தராமன், பாலன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, காமராஜர் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisement