டி.வி.ஆர்., புகழ் என்றும் நிலைத்திருக்கும்: அண்ணாமலை

சென்னை : 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் பிறந்த நாளையொட்டி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு: சிறந்த தேசியவாதியும், 'தினமலர்' நாளிதழின் நிறுவனருமான டி.வி.ராமசுப்பையர் பிறந்த தினம் இன்று. குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர்.

விவசாயிகளின் நலனுக்காக குரல் கொடுத்தவர். பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், ரயில் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி, குமரி மாவட்டம் முன்னேற்றமடைய பல முயற்சிகளை மேற்கொண்டவர். சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர். தமது ஊடகத்தை, சமூகத்தை முன்னேற்ற பயன்படுத்தி வெற்றி கண்ட டி.வி.ராமசுப்பையர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement