பூமி உள்ளவரை டிவிஆர் புகழ் நிலைத்து நிற்கும்: பன்னீர் புகழாரம்

திருச்சி : தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 116வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

உண்மையின் உரைகல்லாக விளங்கி கொண்டிருக்கும் 'தினமலர்' நாளிதழின் நிறுவனரும், நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் மேம்பாட்டிற்காக போராடியவரும், ஈகை மனப்பான்மை கொண்டவரும், தேச பக்தரும், சீர்திருத்தவாதியுமான டி.வி.ராமசுப்பையரின் பிறந்தநாளான இன்று (நேற்று) அவருக்கு எனது மரியாதையையும், வணக்கத்தையும் செலுத்துகிறேன்.

தமிழகம் மற்றும் தமிழர்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தியாகச் செம்மல் டி.வி.ஆர். அவர்கள். அவரது தியாகங்கள், இந்த பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Advertisement