கோயில் திருவிழா

கொட்டாம்பட்டி,: மங்களாம்பட்டி மந்தை பகவதியம்மன் கோயில் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு செப். 24 ல் காப்பு கட்டப்பட்டது.

இரண்டு நாட்கள் நடக்கும் திருவிழாவின் முதல் நாளான நேற்று முன் தினம் நல்ல தண்ணீர் ஊருணியில் இருந்து புதிதாக அம்மன் சிலை செய்து கோயிலுக்கு கொண்டு சென்றனர். பக்தர்கள் மாவிளக்கு வைத்து, சேவல் வெட்டி பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று கோயில் முன்பு கிடா வெட்டும் நிகழ்ச்சி, அம்மன் சிலை ஊர்வலமாக கொண்டு சென்று நல்ல தண்ணீர் ஊருணியில் கரைக்கும் நிகழ்ச்சியுடன் முடிவுற்றது. உடப்பன்பட்டி, அய்யாபட்டி, குன்னாரம்பட்டி, மங்களாம்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களின் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்

Advertisement