முன்னாள் மாணவர் சங்க கூட்டம்

உசிலம்பட்டி: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் ராயர் தலைமையில் நடந்தது.

இயக்குநர் அந்தோணிசாமி வரவேற்றார். செயலாளர் ராபர்ட்திலீபன் ஆண்டு அறிக்கையையும், பொருளாளர் மைக்கேல்ராஜ் தணிக்கை அறிக்கையையும் வாசித்தனர். கல்லுாரி அதிபர் ஜான்பிரகாசம், முன்னாள் மாணவர்கள் டோனிஜார்ஜ், ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

இந்தாண்டு ஓய்வு பெறும் பேராசிரியர்கள் ஜார்ஜ்ஜோசப், ஜோசப்வில்சன், துரைசிங்கம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர். முன்னாள் மாணவர்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement