போதையில் தகராறு 3 வாலிபர்கள் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். ஏர்போர்ட் சாலையில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர். முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யராஜ், 38, என, தெரியவந்தது.போலீசார் வழக்குப் பதிந்து சத்யராஜை கைது செய்தனர்.
இதேபோல், சிவாஜி சிலை அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வானுார் முத்துகுமரன், 26; பூமியான்பேட்டை பகுதியில் தகராறில் ஈடுபட்ட சந்துரு, 19; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement