நவராத்திரி விழா அம்மன் அருள்பாலிப்பு
குன்றத்துார், குன்றத்துார் அடுத்த மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி பெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.
முதல் நாள், மீனாட்சி அலங்காரத்திலும், இரண்டாவது நாளான நேற்று, லட்சுமி தாமரை புஷ்பம் அலங்காரத்திலும், அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து 11 நாள் நடக்கும் நவராத்திரி விழாவில், ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்வார்.
விழாவை முன்னிட்டு, காலை முதல் மாலை வரை இசை நாட்டியம், சொற்பொழிவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement