அறுந்து விழுந்த மின் கம்பி செங்குன்றத்தில் பீதி

செங்குன்றம், செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில், நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் பலத்த காற்றடித்து, மழையும் பெய்தது. அப்போது, வண்டிமேடு, காய்கறி மார்க்கெட் சந்திப்பில், மின் கம்பிகள் வேப்ப மரக்கிளைகளில் உரசி, தீப்பிடித்து எரிந்தது. திடீரென மின் கம்பி அறுந்து விழுந்தது. அப்பகுதியில் மழைக்கு ஒதுங்கியிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.

மற்ற யாரும் மின் கம்பி அருகே செல்லாதவாறு எச்சரித்து கூச்சலிட்டனர்.

தகவல் அறந்து வந்த செங்குன்றம் மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சீரமைத்தனர். இச்சம்பவத்தால், இரண்டு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

Advertisement