'3 மாதமாக ஊக்கத்தொகை வழங்கல' ஆவின் மீது பால் உற்பத்தியாளர் வருத்தம்

ஈரோடு: ''ஆவின் நிறுவனம் மூன்று மாதமாக ஊக்கத்தொகை வழங்கா-ததால், பால் உற்பத்தியாளர் கடும் நெருக்கடியில் உள்ளனர்,'' என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொரு-ளாளர் முனுசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:தமிழகத்தில், 9,200 ஆரம்ப பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம், 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் தினமும், 30 லட்சம் லிட்டருக்கு மேல் பாலை வழங்கி வருகின்றனர். தொடர் போராட்டத்தால், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு, 3 ரூபாய், ஊக்கத்தொகையை ஆவின் நிறுவனம் வழங்கியது. இந்நி-லையில் மூன்று மாதங்களாக ஆவின் நிர்வாகம், ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடிக்கிறது. ஆவின் கலப்பு தீவன ஆலை செயல்படாத நிலையில், ஒரு மாதமாக கலப்பு தீவனம் நிறுத்தப்-பட்டுள்ளது.
ஆவின் நிர்வாகத்தில் இருந்து வாரம் ஒரு முறை ஆரம்ப சங்கங்க-ளுக்கு, கால்நடை டாக்டர்கள் வந்த நிலையில், உரிய மருந்து இல்லாததால், ஆவின் மருத்துவர்களை பயனில்லை என, தனியார் மருத்துவர்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆவின் நிர்வாகம், ஊக்கத்தொ-கையை உடன் வழங்க வேண்டும். கொள்முதல் விலையை, லிட்-டருக்கு, 10 ரூபாய் வீதம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement