கர்ப்பிணி மனைவி மாயம் வேன் டிரைவர் அச்சம்


கர்ப்பிணி மனைவி மாயம்
வேன் டிரைவர் அச்சம்
ஈரோடு, அக். 4-
ஈரோடு, நாட்ராயன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே வசிப்பவர் வேன் டிரைவரான கார்த்திகேய பாலன். இவரின் மனைவி கோகிலவாணி, 23; ஏழு மாத கர்ப்பிணி. மூலப்பட்டறையில் ஒரு டிரேடர்ஸ் நிறுவனத்தில்
பணிபுரிகிறார்.
கடந்த, 30ம் தேதி இரவு, தாயார் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். அங்கு செல்லாததால் அதிர்ச்சி அடைந்த, கார்த்திகேயபாலன் புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.

Advertisement