போதை மாத்திரை விற்பனை செய்த இரு வாலிபர்கள் கைது

ப.வேலுார்: நல்லுார் அருகே, போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.


நாமக்கல் மாவட்டம், நல்லுார் கந்தம்பாளையம் அருகே, வசந்த-புரம் பஸ் ஸ்டாப்பில் போதை மாத்திரைகள் விற்பதாக, போலீ-சாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது, இரண்டு பேர் தப்பி ஓடினர். போலீசார் பிடித்து விசாரித்த போது, ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த விஷால் கார்த்திக், 27, தனியார் மொபைல்போன் நிறுவ-னத்தில் வேலை பார்த்து வருவதும், பரமத்தி அருகே நடந்தை கிராமத்தை சேர்ந்த பிரபு, 23, கூலி தொழிலாளி எனவும் தெரிய-வந்தது.இவர்கள் இருவரும், போதை மாத்திரைகளை விற்பனைக்கு கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு காத்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 26 போதை மாத்திரைகளை பறி-முதல் செய்து நல்லுார் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement