செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் தேசிய மகளிர் செஸ் போட்டி

காரைக்குடி: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 50வது தேசிய மகளிர் செஸ் சாம்பியன் போட்டி 3 வது முறையாக நேற்று தொடங்கியது. போட்டியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர் தேவ் படேல் தொடங்கி வைத்தார். மாநில செஸ் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஸ்டீபன் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் உஷா குமாரி வரவேற்றார். பள்ளி சேர்மன் குமரேசன் தலைமையேற்றார். துணை சேர்மன் அருண்குமார் முன்னிலை வகித்தார்.

சிவகங்கை மாவட்ட செஸ் கூட்டமைப்பு கூடுதல் செயலாளர் கருப்பையா நன்றி கூறினார்.

Advertisement