சூட்கேசில் சடலமாக இருந்த பெண் கைகளில் 6 விரல்கள்

சங்ககிரி: சங்ககிரி, வைகுந்தம் அருகே சர்வீஸ் சாலையில் சிறு பாலத்தின் கீழ் இருந்த சூட்கேசில் ஒரு பெண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அந்த பெண்ணை வேறு எங்கோ கொலை செய்துவிட்டு, இங்கு கொண்டு வந்து வீசிச்சென்றிருக்கலாம் என தெரியவந்தது. அந்த பெண் யார் என, தொடர்ந்து விசாரிக்கின்றனர். அந்த பெண்ணின் இரு கைகளிலும், 6 விரல்கள் உள்ளன. இதை மையப்படுத்தி, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Advertisement