'மது'வில் மீள முடியாத சிவில் இன்ஜினியர் பலி

ஓமலுார்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி, கூடமலையை சேர்ந்தவர் அறி-வழகன், 39. சிவில் இன்ஜினியர். இவரது மனைவி வனிதா, 35. இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

பெங்களூ-ருவில் வேலை செய்த அறிவழகனுக்கு மது அருந்தும் பழக்கம், சர்க்கரை நோய் இருந்தது. 8 மாதங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊர் வந்தார்.வேலைக்கு செல்லாமல் மது அருந்தியபடி இருந்தார். அதில் இருந்து மீட்க செப்., 22ல் ஓமலுார் அருகே மோலாண்டிப்பட்-டியில் உள்ள, குடிபோதை மறுவாழ்வுக்குரிய தனியார் மையத்தில் அவரை சேர்த்தனர். நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மறுவாழ்வு நிர்வாகத்தினர், அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்-கனவே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். வனிதா புகார்படி ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement