ஏ.டி.எம்., கொள்ளையன் சேலம் ஜி.ஹெச்.,ல் அனுமதி

சேலம்: போலீஸ் துப்பாக்கிக்சூட்டில் கால் இழந்த, ஏ.டி.எம்., கொள்-ளையன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


கேரள மாநிலம் திருச்சூரில், ஏ.டி.எம்.,களில் பணத்தை கொள்-ளையடித்து தப்ப முயன்ற கும்பலை, தமிழக போலீசார் நாமக்கல் மாவட்டம் வெப்படையில் சுற்றிவளைத்தனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையன் ஜூமாந்தீன் உயிரி-ழந்தான். அசர் அலி படுகாயம் அடைந்து, கோவை அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டார். தவிர ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அசர் அலியின் வலது காலில் குண்டு பாய்ந்ததில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் கால் எடுக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்-சைக்கு அசர் அலியை, சேலம் அரசு மருத்துவமனைக்கு, போலீசார் உரிய பாதுகாப்புடன் நேற்றிரவு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement