அம்மிக்கல் விற்பதாக நோட்டம் வீடுகளில் திருடிய 3 பேர் கைது

மேச்சேரி: மேச்சேரி, எரகுண்டபட்டி காட்டுவளவு, எம்.காளிப்பட்டி, சிந்தா-மணியூர் ஆகிய இடங்களில் கடந்த ஆகஸ்டில் ஒரு கும்பல் வீடு-களில் புகுந்து நகை, பொருட்களை திருடின. மேச்சேரி போலீசார், அப்பகுதியில் அம்மி, குழவி விற்றோரிடம் விசாரித்-தனர். அப்போது அவர்கள், பகலில் அம்மி, குழவி விற்பதோடு, வீடுகளை உளவு பார்த்து விட்டு இரவில் நகைகளை திருடுவது தெரிந்தது.


இதுதொடர்பாக தேனி மாவட்டம் உத்தமபாளையம், காமாட்சி-புரம் மாணிக்கம், 32, மாரிமுத்து, 45, அருகே உள்ள சந்தன மாரி-யம்மன் கோவில் தெரு அய்யப்பன், 24 ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம், மேச்சேரி சுற்றுப்பகு-தியில் திருடிய, 82 கிராம் நகை, சங்கிலியை மீட்டனர்.

Advertisement