மகளிர் கல்லுாரியில் யோகா பயிற்சி

சேலம்: சேலம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முதலாம் ஆண்டு மாணவியருக்கு, 4 நாட்கள் யோகா பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் காந்திமதி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் வசந்தி, கீதாலட்சுமி, பாண்டிக்-கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


அதில் காசக்காரனுார் மனவளக்கலை மன்றம் சார்பில் மாண-வியர், புது சூழலில் தங்களை தயார்படுத்திக்கொள்ளவும், தேர்-வுக்கு சிறப்பாக தயாராகவும் பயிற்சி அளிக்கப்பட்டன. உடல்-நலம் சிறக்க, நோயற்ற வாழ்வு பெற, நினைவு திறன் மேம்ப-டுத்த, மனதை ஒருமுகப்படுத்தி கவனிக்கும் திறனை மேம்ப-டுத்த, ஆற்றல், அமைதி கிடைக்க யோகா, தியான பயிற்சிகள் கற்-றுக்கொடுக்கப்பட்டன. முதலாம் ஆண்டு மாணவியர் பயன்பெற்-றனர். இப்பயிற்சி இன்றுடன் முடிகிறது.

Advertisement