பெட்ரோல் குண்டுவீச்சு தி.வி.க., தலைவர் ஆஜர்

சேலம்: இலங்கையில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா பங்-கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி, சேலம், காந்தி சாலை அருகே உள்ள வருமான வரி அலுவலகம் மீது, 2018ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, 4 பேரை கைது செய்தனர். இதில் குண்டு வீச துாண்டியதாக, திராவிட விடுதலை கழக தலைவர் மணி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. நேற்று நடந்த விசார-ணையில் மணி உள்பட, 5 பேர் ஆஜராகினர். பின் இந்த வழக்கு, வரும், 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement