ரிங் ரோடு அமைக்கும் பணி பட்டாதாரரிடம் விசாரணை

ஆத்துார்: சேலம் - உளுந்துார்பேட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து ஆத்துார் தெற்கு பகுதியில், 'ரிங் ரோடு' எனும் புறவழிச்சாலை பணிக்கு அம்மம் பாளையம், வளையமாதேவி, துலுக்கனுார், ஆத்துார், நரசிங்க-புரம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது.

இதில் அம்மம்பாளையம், வளையமாதேவி பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பட்டாதாரர்களிடம் விசாரணை முகாம் ஆத்-துாரில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்-தகி(நிலம் எடுப்பு) தலைமையில் வருவாய்துறையினர், 21 பட்டா-தாரர்களிடம் விசாரித்தனர்.

Advertisement