வீட்டின் மீது சாய்ந்த புளியமரம்

செந்துறை: செந்துறை அருகே சொறிப்பாறைப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் 32. இவரது வீட்டின் அருகில் பழமை வாய்ந்த புளியமரம் கீழே விழும் நிலையில் இருந்தது.

வருவாய்த்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் புளியமரம் வேரோடு சாய்ந்து அந்த பகுதி வீட்டின் மீது விழுந்தது.

வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Advertisement