திண்டுக்கல் கோயில்களில் நவராத்திரி வழிபாடு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் நவராத்திரி வழிபாடுகள் நேற்று தொடங்கியது. இதையொட்டி கோயில்கள்,வீடுகளில் கொலு வைக்க பக்தர்கள் தரிசித்தனர்.

நவராத்திரியை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில்,ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோயில்,பழநி ரோடு காளியம்மன் கோயில்,நாகல்நகர் மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடந்தது. கோயில் , வீடுகளில் கொலு அமைத்து வழிபாடு நடந்து வருகிறது .

Advertisement