மின்சாரம் தாக்கி பெண் பலி

செந்துறை : சேத்துார் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ் 45. இவருக்கு முத்துலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் 6 மாதத்திற்கு முன் பரிமளா 37, என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார்.

இந்நிலையில் நேற்று பரிமளா தனது வீட்டின் முன்பிருந்த முருங்கை மரத்தில் அலுமினிய பைப் கொண்டு முருங்கைக்காய் பறிக்க முயன்றார்.

மின் கம்பியில் பட்டதில் மின்சாரம் தாக்கி இறந்தார். இதுகுறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.

Advertisement