11 ஆண்டுகளுக்கு முன் கணவர் மாயம்

ஆண்டிபட்டி : சக்கம்பட்டி பகவதி அம்மன் கோயில் தெரு சிவகாமி 40, எஸ்.எஸ்.புரம் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் காளீஸ்வரன் 44, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி பிரிந்தனர்.

காளீஸ்வரன் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தை விற்பதற்கு கிரையம் பேசி முன் பணமாக ரூ.50 ஆயிரம் வாங்கிக்கொண்டு சென்றவர் கடந்த 2013 நவ.,13 முதல் வீட்டிற்கு வரவில்லை. கணவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிவகாமி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement