சிறப்பு திட்டத்தில் 1000 பேருக்கு பட்டா
தேனி : பெரியகுளம் தாலுகா, தாமரைகுளம் பிட் 1 பகுதியில் சிறப்பு திட்டத்தில் ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. இப் பகுதியில் வசிக்கும் பெருபாலான மக்கள் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்து வந்தனர்.
இந்நிலையில் சிறப்பு திட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது.
இதில் டி.கள்ளிபட்டி கிராமம் நத்தம் புல எண் 3083ல் வீடுகள் கட்டி குடியிருக்கும் பொதுமக்கள் உரிய ஆதார ஆவணங்களை நில அளவை பணி செய்ய வரும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement