போபண்ணா ஜோடி வெற்றி: ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிசில்

ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, குரோஷியாவின் டோடிக் ஜோடி வெற்றி பெற்றது.

சீனாவில், ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, ஸ்பெயினின் பாப்லோ பஸ்டா, பெட்ரோ மார்டினஸ் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய இந்தியா-குரோஷிய ஜோடி, இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தியது.
ஒரு மணி நேரம், 3 நிமிடம் நீடித்த போட்டியில் போபண்ணா, டோடிக் ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.


ஒற்றையரில் இந்திய வீரர்களின் பங்களிப்பு ஏற்கனவே முடிவுக்கு வந்தது. இந்தியாவின் சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன் முதல் சுற்றோடு திரும்பினர்.

Advertisement