ரூ.7.83 கோடி மோசடி; கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில், கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. செயலாளராக சங்கர், எழுத்தராக பாரதி வேலை செய்தனர். இருவரும், 2018 முதல், 2023ம் ஆண்டு வரை பல்வேறு முறைகேடு செய்தனர். சங்க உறுப்பினர்களின் வைப்பு நிதி, போலி பட்டா மூலம் மோசடி என, ஏழு கோடியே, 83 லட்சம் மோசடி செய்தது, கடந்த ஆண்டு வருடாந்திர தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.


இதுகுறித்து கூட்டுறவு சங்க தலைவர் சுவேதா, வேலுார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன்படி வழக்குப்பதிந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Advertisement