மதுபாட்டில் விற்றவர் கைது

சென்னை:சேத்துப்பட்டு போலீசார் நேற்று காலை, 10:00 மணியளவில், எஸ்.எம்.சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்து வந்த, அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 51, என்பவரை கைது செய்தனர். 10 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement