'வெளியூர் சென்றால் தகவல் தெரிவியுங்க'

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் போலீசார் சார்பில், மக்களுக்கு குற்றத்த-டுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று ஆவாரங்காடு பகு-தியில் உள்ள நகராட்சி மண்டபத்தில் நடந்தது. எஸ்.ஐ., பிரபா-கரன், மற்றும் போலீசார், விழிப்புணர்வு குறித்து பேசினர். அப்-போது, வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், வயதானவர்கள் எப்போதும் வீட்டின் கதவை பூட்டியே வைத்திருக்க வேண்டும். வெளியூர் சென்றால், போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும்.



ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், தங்க நகை-களை அணிந்து தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சந்தேக நபர்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரி-விக்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான

குற்றங்கள், சட்-டங்கள், புகார் கொடுக்கும் வழிமுறை, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விளக்கப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்-டனர்.

Advertisement