குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு தியான முகாம்

திரு.வி.க. நகர்:திரு.வி.க., நகர் மண்டலத்தில் பணிபுரியும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்களுக்கு, மன அழுத்தத்தை போக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், கொளத்துார், ஜவஹர்லால் நேரு சாலையில், சிறப்பு தியான முகாம் நேற்று நடந்தது.

இதில், யோகாவில் சிறந்து விளங்கும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த குழுவினர் முகாமை வழிநடத்தினர்.

பிராண குணப்படுத்துதல் முறை வாயிலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தலைமை பொறியாளர் சிவமுருகன், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement