மேலவலம்பேட்டையில் நுாலக கல்வி சேவை துவக்கம்

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டையில், உதவும் கரங்கள் அமைப்பின் வாயிலாக, நுாலக கல்வி சேவை துவக்க விழா நடந்தது.

இதில், உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் சரவணண் தலைமையில், எழுத்தாளரும் பதிப்பாளருமான முனைவர் லேனாதமிழ்வாணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இதில், பள்ளி, கல்லுாரி முடித்த மாணவர்கள், போட்டித் தேர்வு புத்தகங்கள் மற்றும் புத்தக வாசிப்பாளர்கள், தாங்கள் வாசித்த புத்தகங்களை அளிக்கும்படி கோரப்பட்டது.

தங்களுக்கு உபயோகம் இல்லாத புத்தகங்களை, நுாலக சேவை பெட்டியில் வைத்துச் செல்வதால், அவற்றை புத்தகம் தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ள உதவும்.

இந்நிகழ்வில், உதவும் கரங்கள் அமைப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement