சாலை வளைவு பகுதியில் மண் குவியலால் ஆபத்து

திருப்போரூர்:திருப்போரூர் அருகே -தண்டலம் ஓ.எம்.ஆர்., சாலையில், தனியார் பள்ளி, மருத்துவமனை, திருமண மண்டபங்கள், குடியிருப்பு வீடுகள், பல்வேறு வணிக கடைகள் உள்ளன.

இச்சாலை மையத்தடுப்பின் ஓரத்தில் மண் குவிந்துள்ளது. குறிப்பாக, சாலை வளைவு பகுதியிலும், சாலை ஓரத்திலும் உள்ள மண் குவியலால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள், பிரேக் பிடிக்கும்போது நிலை தடுமாறுகின்றன.

துாசு பறந்து கண்களில் விழுவதால், வாகனங்களை இயக்க சிரமப்படுகின்றனர். மேலும், வளைவு பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. நீண்ட நாட்களாக உள்ள மண் குவியல் அகற்றப்படாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, சாலை மையத் தடுப்பில் உள்ள மண் குவியல்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement