இடியும் நிலையில் வி.ஏ. ஓ.,அலுவலகம்
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பூலத்துாரில் வி.ஏ.ஓ., அலுவலகம் சேதமடைந்து விபத்து அபாய நிலையில் செயல்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் வி.ஏ.ஒ , அலுவலகம் கட்டமைக்கப்பட்டது.
தற்போது கூரை சேதமடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை நீர் உட்புகுந்து அலுவலக கோப்புகளை பாதுகாக்க முடியாத நிலை, புதர் மண்டி விஷ , பூச்சிகள் நடமாட்டத்துடன் அலுவலகம் செயல்படுகிறது. நாள்தோறும் பொதுமக்கள் வருவாய் துறை சம்பந்தமான விவரங்களுக்கு வருகை தரும் நிலையில் அச்சுறுத்தலாக உள்ளது. சேதமடைந்த கட்டடத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement