பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்றது சஞ்சய் ராய் : குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ, தகவல்

9

கோல்கட்டா: கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்தது சஞ்சய் ராய் தான் என குற்றப்பத்திரிக்கையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.


மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் ஆய்வக அறையில் கடந்த ஆக். 09ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, சஞ்சய் ராய் எனபவன் கைது செய்யப்பட்டான் ஆக. 14-ம் தேதி கோல்கட்டா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, இந்த வழக்கை , சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் மத்திய கோல்கட்டா மாவட்டம் சீல்டாக் சிறப்பு சி.பி.ஐ., கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சி.பி.ஐ.. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 200 பேரிடம் பெற்ற சாட்சியம் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பவம் நடந்த ஆக.09-ம் தேதியன்று பெண் பயிற்சி டாக்டர் கருத்தரங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஒய்வறைக்கு சென்றுக்கொண்டிருந்தார்.

ஆய்வக அறை வழியாக சென்ற போது தான் அவரை பின் தொடர்ந்து சென்ற குற்றவாளியான சஞ்சய் ராய் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தான். இதில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தற்கான தடயம் இல்லை. இவ்வாறு அந்த குற்றப்பத்திரிக்கையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

Advertisement