பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்றது சஞ்சய் ராய் : குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ, தகவல்
கோல்கட்டா: கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்தது சஞ்சய் ராய் தான் என குற்றப்பத்திரிக்கையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் ஆய்வக அறையில் கடந்த ஆக். 09ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, சஞ்சய் ராய் எனபவன் கைது செய்யப்பட்டான் ஆக. 14-ம் தேதி கோல்கட்டா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, இந்த வழக்கை , சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் மத்திய கோல்கட்டா மாவட்டம் சீல்டாக் சிறப்பு சி.பி.ஐ., கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சி.பி.ஐ.. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 200 பேரிடம் பெற்ற சாட்சியம் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பவம் நடந்த ஆக.09-ம் தேதியன்று பெண் பயிற்சி டாக்டர் கருத்தரங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஒய்வறைக்கு சென்றுக்கொண்டிருந்தார்.
ஆய்வக அறை வழியாக சென்ற போது தான் அவரை பின் தொடர்ந்து சென்ற குற்றவாளியான சஞ்சய் ராய் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தான். இதில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தற்கான தடயம் இல்லை. இவ்வாறு அந்த குற்றப்பத்திரிக்கையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (8)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07 அக்,2024 - 22:16 Report Abuse
இன்னும் அந்த கொடூரனை உயிருடன் விட்டுவைத்துள்ளீர்களா..?? ஓடவிட்டு என்கவுண்டர் செய்யவும்.
0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
07 அக்,2024 - 21:58 Report Abuse
இந்த வழக்கில் மேற்குவங்க போலீஸ் சொன்னதை அப்படியே வழிமொழிகிறது சி பி ஐ ......
0
0
Reply
GMM - KA,இந்தியா
07 அக்,2024 - 21:28 Report Abuse
200 பேரிடம் பெற்ற சாட்சி மற்றும் வாக்கு மூலம் அடிப்படையில் சஞ்சய் பாலியல் பலாத்காரம். கூட்டு பலாத்காரம் யில்லை. சிபிஐ மற்ற கோணத்தில் விசாரிக்க மம்தா பானர்ஜி அனுமதிக்கவில்லை. ? சிபிஐ விசாரணை போல் தெரியவில்லை. சிபிஐ பொய் சாட்சி கேள்வி பட்டதில்லை. கருத்தரங்கு நிகழ்ச்சி என்றால் பலர் கூடி பிரிய கால தாமதம் ஆகும். ஓய்வறைக்கு தனியாகவே ஆய்வக அறை வழியாக சென்றார்? சஞ்சய் பின் தொடர்கிறார். யாரும் இல்லை. வெப் கேமரா பதிவு யில்லை. அலறல் யில்லை. எதிர்ப்பு யில்லை. ஆனால் கொலை நடந்து விட்டது. மம்தா ராஜினாமா செய்தால் தான் உண்மை வெளிவரும். மேற்கு வங்காளம் யூனியன் பிரதேசம் ஆக்க வேண்டும்.
0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
07 அக்,2024 - 21:04 Report Abuse
வெட்கம் மானம் எதுவுமில்லா மீடியா வுக்கு சவுக்கடி
0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
07 அக்,2024 - 21:03 Report Abuse
பதவி விலக வேண்டியது யார்? அமித்ஷா? சுவேந்து அதிகாரி?
0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
07 அக்,2024 - 21:00 Report Abuse
இந்த கொடூர இல்லையென்றால் அது வேறு சில மருத்துவ ஊழியர்கள் தான் இருக்க முடியும்? அதை மூடி மறைக்க டாக்டர்கள் போராட்டம்? சபாஷ்
0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
07 அக்,2024 - 20:58 Report Abuse
இப்போ மீடியா என்ன சொல்லுது? ஏதோ நேர்ல பார்த்த மாதிரி பினாத்தினாங்களே
0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
07 அக்,2024 - 20:56 Report Abuse
கவர்னர் பதவி விலக வேண்டும்
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement