நித்ய பாண்ட்யா அபாரம் * இந்திய யூத் அணி ரன் குவிப்பு

சென்னை: யூத் டெஸ்டில் இந்திய அணி முதல் நாளில் 316/5 ரன் குவித்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய யூத் அணி (19 வயதுக்குட்பட்ட), இரு போட்டி கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் நேற்று சென்னையில் துவங்கியது.
'டாஸ்' வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு விஹான் மல்கோத்ரா (10), வைபவ் சூர்யவன்ஷி (3) ஏமாற்றம் தந்தனர். பின் வந்த நித்ய பாண்டியா, கார்த்திகேயா ( 71) இணைந்து ரன் குவிப்பை வெளிப்படுத்தினர். நித்ய பாண்ட்யா 94 ரன்னில் அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
நிகில் குமார் (61) தன் பங்கிற்கு அரைசதம் விளாசினார். முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில், இந்திய அணி 316/5 ரன் எடுத்திருந்தது. கேப்டன் சோஹம் பட்வர்தன் (61), ஹர்வன்ஷ் (7) அவுட்டாகமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஹாரி 2, ஒலி பேட்டர்சன், ஹோவ், விஸ்வா ராம்குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement