கேரளாவை வென்றது தமிழகம் * தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில்...

பாலக்காடு: தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் தமிழக பெண்கள் அணி 3-1 என கேரளாவை வென்றது.
பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கேரளாவில் நடக்கிறது. பாலக்காடில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கேரளா மோதின.
தமிழகத்தின் காவ்யா, 40 வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அடுத்த 4வது நிமிடத்தில் சந்தியா (44வது) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்து உதவினார்.
போட்டியின் 53 வது நிமிடம் கேரளாவின் மானசா ஒரு கோல் அடித்தார். 65 வது நிமிடத்தில் கேரளாவின் அஞ்ஜிதா 'சேம் சைடு' கோல் அடித்தார். முடிவில் தமிழக அணி 3-1 என்ற கோல் கணக்கில வெற்றி பெற்றது.
நேற்று நடந்த 'ஏ' பிரிவு மற்றொரு போட்டியில் கோவா அணி, 7-0 என்ற கோல் கணக்கில் இமாச்சல பிரதேச அணியை வென்றது.
'ஏ' பிரிவில் கோவா (6 புள்ளி), கேரளா (3), தமிழகம் (3) முதல் மூன்று இடங்களில் உள்ளன.

Advertisement