கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

பவானி: வெள்ளித்திருப்பூர் அருகேயு மாத்துார் மணல்காடு பகுதியில், அந்-தியூர் மண்டல துணை தாசில்தார் பெரியசாமி, ஆர்.ஐ., செந்தில்-ராஜா, மாத்துார் வி.ஏ.ஓ., பானுரேகா, கனிமவள திருட்டு தொடர்-பான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பதிவெண் இல்லாமல் வந்த டிராக்டரில் சோதனையிட்டனர். அதில் சட்ட விரோதமாக கல் எடுத்து செல்வது தெரிந்து பறிமுதல் செய்தனர். மோத்தங்கல்புதுாரை சேர்ந்த டிரைவர் அருண்குமார், 32, மீது, வெள்ளித்திருப்பூர் போலீசில் புகார் தந்தனர்.

Advertisement