பள்ளி அருகே மது கூடம் எதிர்ப்பு தெரிவித்து மனு
ஈரோடு: நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, தனியார் மதுபான கூடம் அமைக்க பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நம்பியூர் டவுன் பஞ்., துணை தலைவர் தீபா தமிழ்செல்வன், வடக்கு மாவட்ட தி.மு.க., நெசவாளரணி தலைவர் சண்முகம் உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், நேற்று மனு வழங்கி கூறி-யதாவது: நம்பியூர் நகரின் பிரதான பகுதியில், அரசு மேல்நிலைப்-பள்ளி உள்ளது. பள்ளி அருகே, 100 மீட்டருக்குள், நம்பியூர் - எலத்துார் சாலையில் தனியார் மதுக்கூடம் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். இதனால் மக்கள் மட்டுமின்றி, மாணவர்-களும் பாதிப்பர். அவ்விடத்தில் மதுக்கூடம் அமைக்க அனும-திக்க கூடாது. இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement