நகராட்சியில் ஊராட்சியை இணைக்க மக்கள் எதிர்ப்பு

தாராபுரம்: தாராபுரம் நகராட்சியை அடுத்துள்ள கவுண்டச்சிபுதுார், நஞ்சியம்-பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளை, நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவுண்-டச்சிபுதுாரை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள், தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். ஆர்.டி.ஓ., செந்தில்அரசனிடம் மனு கொடுத்தனர். அதில், 'அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும். மக்களின் கோரிக்-கையை ஏற்காவிட்டால், ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை-களை ஒப்படைப்பதுடன், சட்டசபை தேர்தலையும் புறக்க-ணிப்போம்' என்று தெரிவித்திருந்தனர். கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக ஆர்டிஓ கூறியதை தொடர்ந்து மக்கள் திரும்பி சென்றனர்.

Advertisement