சி.பி.எம்., சார்பில் மாநாடு

பவானி: பவானி அருகேயுள்ள தளவாய்பேட்டையில், சி.பி.எம்., சார்பில் நேற்று மாநாடு நடந்தது. நிர்வாகி சண்முகம் தலைமை வகித்தார். பவானி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க, ரிங் ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

ஆப்பக்கூடல் நால்-ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். பவானி புது பஸ் ஸ்டாண்ட் உள்பகுதியில் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement