கஞ்சா செடி வளர்த்தவர் கைது

கடலுார்:கடலுார் திருவந்திபுரத்தைச் சேர்ந்தவர் குப்பன் மகன் ராஜ்கமல், 26. இவர் சில மாதங்களாக, கடலுார் புதுநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கிறார்.

அவர் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்து வருவதாக, புதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் நேற்று நேரில் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, 4 அடி உயர கஞ்சா செடி வளர்த்திருப்பதை உறுதி செய்தனர். அதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து ராஜ்கமலை கைது செய்தனர்.

Advertisement