தாய் நகைகளை திருடிய மகன் கைது

திருச்சி:திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழ்கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்தவர் யாகூப். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி பரிதா, 60. இவர்களின் மகன் சதாம் உசேன், 43. இவர் ஜெயராணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சதாம் உசேன் மார்க்கெட்டில் தொழில் செய்து வந்தார். இவர்கள் நால்வரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், வீட்டின் பீரோவில் வைத்திருந்த பரிதாவின் நகைகளில், 14 சவரன் நகை மட்டும் காணாமல் போனது.

இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சொகுசு வாழ்க்கைக்காக, தன் தாயின் நகைகளை சதாம் உசேன் திருடியது தெரிந்தது. இதையடுத்து நேற்று சதாம் உசேனை கைது செய்து, 14 சவரன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement