சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்
துாத்துக்குடி:துாத்துக்குடி, கோவில்பட்டியில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான வேன், நேற்று மாலையில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஆவல்நத்தம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது.
அருணாச்சலம் என்பவர் வேனை ஓட்டிச் சென்றார். ஆவல்நத்தம் கிராமம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்ற பள்ளி வேன், திடீரென நிலை தடுமாறி, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
வேனில் இருந்த 4ம் வகுப்பு மாணவர் விக்னேஷ், 9ம் வகுப்பு மாணவி பேபி ஷாலினி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement