அரணை விழுந்த மது குடித்தவர் 'அட்மிட்'
திட்டக்குடி:கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கீழ்ஆதனுாரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன், 54. இவர் நேற்று மதியம் 2:30 மணிக்கு, பெருமுளை டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி குடித்தார்.
மீதி இருந்த மதுவை பார்த்தபோது, அதில், அரணை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த மதுவை குடித்ததால், வயிற்று எரிச்சல் ஏற்பட்டதாக கூறி, கொளஞ்சிநாதன், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
மேல் சிகிச்சைக்காக அரியலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தகவலறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement