விண்வெளி கண்காட்சி

விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில் நுட்பக்கல்லுாரியில் உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய உந்தும வளாகத்துடன் இணைந்து அக். 7 முதல் அக். 9 வரை நடந்த விண்வெளி கண்காட்சியை மகேந்திரகிரி ஐ.பி.ஆர்.சி., முன்னாள் இயக்குனர் கார்த்திகேசன் துவக்கி வைத்து பேசினார்.

இதில் ஐ.பி.ஆர்.சி., அமைப்புக்குழுத் தலைவர் சுரேஷ், துணை இயக்குனர் சிவக்குமார் பேசினர். மேலும் கல்லுாரி செயலாளர் தர்மராஜன், கல்லுாரி முதல்வர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். ஐ.பி.ஆர்.சி., அமைப்புக்குழு தலைவர் தீபா நன்றி கூறினார்.

Advertisement