ஆட்டை காப்பாற்றிய பெண்; தவறி கிணற்றில் விழுந்து பலி

தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார், வீ.ராமநாதபுரம், உதயம் நகரை சேர்ந்த ஜெகநாதன் மனைவி கனகா, 32. இவர் நேற்று மாலை, 5:00 மணிக்கு, வீடு அருகே உள்ள பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.


அப்போது ஒரு ஆட்டுக்குட்டி, அப்பகுதியில் உள்ள கிணற்றில் விழும்படி சென்றது. அதைப்பார்த்த கனகா, அந்த குட்டி விழாமல் தள்ளிவிட்டார். அப்போது மண் சறுக்கி விட்டதில், அவர் தவறி, 40 அடி ஆழம், 10 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்தார். அதைப்பார்த்து மற்றொரு பெண் கூச்சலிட்டார். அப்பகுதி மக்கள் கிணற்றில் இறங்கியபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு கனகா இறந்தது தெரிந்தது. உடலை மீட்டு வந்தனர். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement