மின்கம்பத்தில் மோதிய பைக்; கட்டட தொழிலாளி சாவு

ஏற்காடு: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வழி, மணியதஹள்ளியை சேர்ந்த துரைராஜ் மகன் கார்த்திக், 25. இவர், 4 நாட்களுக்கு முன் ஏற்காடு, நாகலுாரில் கட்டட வேலைக்கு வந்தார். வேலை செய்து வந்த அவர் நேற்று முன்தினம் லாங்கில்பேட்டையில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு, 'யமாகா ஆர்15' பைக்கில் நாகலுார் புறப்பட்டார்.


கார்த்திக் வேகமாக ஓட்டிச்சென்ற நிலையில், ஏற்காடு பஸ் ஸ்டாண்ட் அடுத்த, நியூ டவுன் பகுதியில் நிலை தடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதினார். அதில் கார்த்திக் படுகாயம் அடைந்து, ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement