ஓட்டலில் பணம் வைத்து சூதாடிய தி.மு.க., கவுன்சிலர் உட்பட 7 பேர் கைது

மரக்காணம் : மரக்காணம், தீர்த்தவாரி அருகே ஓட்டலில் பணம் வைத்து சூதாடிய கவுன்சிலர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து, 1.80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட தீர்த்தவாரி கடலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு ஓட்டலில் 10க்கும் மேற்பட்டோர் இரவு நேரங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக விழுப்புரம் காவல் கட்டுப்படாட்டு அறைக்கு புகார் வந்தது.


அதன் பேரில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு, சம்பந்தப்பட்ட ஓட்டலில் சோதனை நடத்தினர். போலீசாரை பார்த்ததும் சிலர் தப்பியோடினர்.


அதில் 7 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், எக்கியர்குப்பம் பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலர் தேசப்பன், 50; கரிப்பாளையம் பிரகாஷ், 30; விஜயகுமார்,40; பிரகாஷ், 40; திருக்கோவிலுார் அடுத்த முருக்கம்பட்டி யோகநாதன், 28; செங்கல்பட்டு மாவட்டம், விளம்பூர் விமல்தாஸ், 25; கடப்பாக்கம் பிரகாஷ், 40; என்பது தெரியவந்தது.

ஏழு பேரையும் கைது செய்து, 1.80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement